ஆதார் அட்டை தாரர்களுக்கு ரூ. 4.78 லட்சம் நிதி அளிக்கும் மத்திய அரசு? PIB விளக்கம்!
மத்திய அரசு நாட்டு மக்களுக்கு அதிக அளவிலான பலன் நிறைந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆதார் கார்டினை அடிப்படையாக வைத்து மத்திய அரசு நிதி உதவி அளிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
நிதி உதவி:
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் சேவை செய்து வருகின்றது. பிறந்த குழந்தை முதல் வயது மூத்த முதிர்ந்தவர்கள் வரை பல வகையான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆதார் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடனுதவி அளிப்பதாக பாரத பிரதமர் மோடியின் புகைப்படத்தோடு கூடிய செய்திகள் பரவி வருகிறது.
தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் தீவிரமாக அதிகரித்து உள்ள ‘மெட்ராஸ் ஐ’ – அமைச்சர் பேட்டி!
Exams Daily Mobile App Download
இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் PIB Fact Check என்ற மத்திய அரசின் போலி செய்திகளை ஆராயும் தளம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதார் அட்டைகளுக்கு ரூ. 4.78 லட்சம் கடன் அளிப்பதாக வரும் தகவல்கள் பொய்யானது என்றும், இதை யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்து மக்கள் மோசடி நபர்களிடம் தங்களின் முக்கிய விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.