TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நாளை ஜூன் 19 ஆம் தேதி குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வருமாறு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடகளாக கொரோனா தொற்றின் காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. பின்னர் கொரோனா குறைந்த நிலையில் போட்டி தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழ்நாடு தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.
TN Job “FB Group” Join Now
குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என ஏற்கனவே TNPSC அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழிலும் தேர்வு நடைபெறும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வு தமிழிலும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூன் 20 முதல் 2 வாரங்களுக்கு பள்ளிகள் மூடல், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – அதிரடி உத்தரவு!
இது குறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 19.06.2022 மு.ப & பி.ப அன்று நடைபெறும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிகளுக்கான தேர்விற்கு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாளை வரவிருக்கும் தேர்வர்கள் அனைவரும் முன்கூட்டியே வருமாறு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.