TNPSC குரூப் 4 VAO போட்டித்தேர்வு – பாடத்திட்டம், தேர்வு முறைகள் குறித்த விவரங்கள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
குரூப் 4, விஏஓ
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த தேவைகளுக்கேற்ப குருப் 1, குரூப் 2 , குரூப் 4, மற்றும் ஆசிரியர்களுக்கான டெட் மற்றும் டிஆர்பி தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளை லட்சக்கணக்கான மக்கள் எழுதுகின்றனர். குரூப் 4 தேர்வுடன் சில ஆண்டுகளுக்கு முன் விஏஓ பதவிகளுக்கான தேர்வும் சேர்த்தே நடத்தப்பட்டு வருகிறது. அரசுத்துறைகளில் ஆரம்ப நிலை பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுவதால், இதற்கான கல்வித் தகுதி 10 ம் வகுப்பு ஆகும். அதற்கு மேலும் படித்திருப்பவர்கள் இந்த தேர்வினை எழுதலாம்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நவ.29 கடைசி நாள்!
குரூப் 4 தேர்வில் மொழிப்பாடம் மற்றும் பொது அறிவு என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தமிழ் அல்லது ஆங்கில மொழி பாடங்களில் 100 வினாக்கள் இடம்பெறும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம். அனைத்து வினாக்களும் கொள்குறி முறையில் தேர்வு நடத்தப்படும். குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் – 6 மாதங்களுக்கு நீட்டிக்க கோரிக்கை!
குரூப் 4 தேர்வில் பங்குபெறுவோர் 21 முதல் 30 வரை இருக்க வேண்டும். பட்டியலினத்தவர்கள் 40 வயது வரை இத்தேர்வை எழுதலாம். குரூப் 4 தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். குரூப் 4 தேர்வில் பெரும்பாலும் வினாக்கள் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்தும் சில வினாக்கள் 11,12 வகுப்பு பாடங்களில் இருந்தும் கேட்கப்படலாம் கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வு நடைபெறவில்லை தற்போது கொரோனா பரவல் குறைந்து அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளித்து வருகிறது. இதனால் விரைவில் குரூப் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய செய்திகளில் மேற்படிப்பு படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
வயது வரம்பு பற்றிய தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
Exam date when announcement
DC
இது மிகவும் பயன்உ
ள்ளதாகஇருக்கிறது
👌👌👌👌👌👌👌