ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் – 6 மாதங்களுக்கு நீட்டிக்க கோரிக்கை!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் - 6 மாதங்களுக்கு நீட்டிக்க கோரிக்கை!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் - 6 மாதங்களுக்கு நீட்டிக்க கோரிக்கை!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் – 6 மாதங்களுக்கு நீட்டிக்க கோரிக்கை!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு இலவச உணவு தானியங்கள் வழங்கி வரும் திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமருக்கு கோரிக்கை:

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பினை குறைப்பதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும், பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பிரதமரால் துவக்கப்பட்ட உணவு பாதுகாப்பு நலத்திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினால் பலனடையும் அனைத்துப் பயனாளிகளுக்கும் நபருக்கு ஐந்து கிலோ வீதம் கூடுதல் உணவு தானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை முன்னுரிமையற்ற கார்டுதாரர்களில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கூடுதல் அரசி இலவசமாக வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் 57000 காலியிடங்கள் – நவ.30 கடைசி நாள்! AICTE அனுமதி!

வட இந்திய மாநிலங்களில் இதற்கு பதிலாக ஐந்து கிலோ கோதுமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மாநில அரசு வழங்கும் ரேஷன் பொருட்களுடன் கூடுதலாக இந்த இலவச தானியங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்த காரணத்தால் மக்களின் நலன் கருதி நவம்பர் 30ம் தேதி வரை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் இதுவரை 80 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இலவச ரேஷன் பொருட்களை பெற்றுள்ளனர்.

Cognizant, Amazon நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் – எந்தெந்த பணியிடங்களுக்கு தெரியுமா? முழு விவரம் இதோ!

இந்நிலையில், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நவம்பர் மாதத்திற்கு பிறகு நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய உணவுத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே நேற்று அறிவித்துள்ளார். ஆனால் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் விலை உயர்வு மற்றும் பொருளாதார சூழல் காரணமாக அன்றாட உணவை பெற முடியாத நிலையில் மக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!