தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நவ.29 கடைசி நாள்!

0
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நவ.29 கடைசி நாள்!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நவ.29 கடைசி நாள்!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நவ.29 கடைசி நாள்!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையினால் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையங்களில் பணிபுரிய மருத்துவ அலுவலர்கள், செவிலியர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு நவ.29ம் தேதி கடைசி நாள்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு அமைக்கப்படும் மையங்களில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அலுவலர், செவிலியர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் – 6 மாதங்களுக்கு நீட்டிக்க கோரிக்கை!

அந்த முதலுதவி மையத்தில் பணிபுரிய மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் என ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவ அலுவலர் பணிக்கு மருத்துவ துறையில் MBBS முடித்திருக்க வேண்டும். மேலும் வயது 35க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.75 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செவிலியர் பதவிக்கு செவிலியர் பிரிவில் டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் மிட்வைஸ் முடித்திருக்க வேண்டும். இதற்கு வயது 35க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.14 ஆயிரம் வழங்கப்படும்.

தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் 57000 காலியிடங்கள் – நவ.30 கடைசி நாள்! AICTE அனுமதி!

அதனை தொடர்ந்து பல்நோக்கு மருத்துவ பணியாளர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 40க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் 6 ஆயிரம் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.samayapurammariammantemple.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621 112 என்ற அஞ்சல் முகவரிக்கு வரும் நவ.29ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!