SBI வங்கி வழங்கும் சூப்பர் பயிற்சிகள் – தொழில் தொடங்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் வாய்ப்பு!
இந்தியாவில் மக்களுக்கு நிதி சார்ந்த அறிவு மற்றும் பயிற்சி வழங்குவதற்காக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளது. பயிற்சி பெற விரும்புவர் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ:
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்களையும், அதில் சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. கடந்த மே மாதங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி சேவையை அளித்து வந்தது. எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணைய பக்கம் மூலம் வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைகளை செய்து வந்தனர். கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு வங்கி கொரோனா சிகிச்சைக்கான கடன் தொகையை குறைந்த வட்டியில் வழங்கியது.
IPPB இல் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
இயந்திரங்களில் பாதுகாப்பான பண பரிவர்த்தனையை வழங்கும் வகையில் பணத்தை எடுக்க OTP எண்ணை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி தேசிய பங்குச் சந்தை அகடாமியுடன் இணைந்து வங்கி சேவைகள், இணக்கம், கடன் விதிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் எஸ்பிஐ வங்கியால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. அனுபவமும், திறமையும் நிறைந்த வங்கி நிபுணர்களால் இந்தப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வேலைக்கு செல்லும் ஊழியர்கள் வங்கி சார்ந்த போன்றவர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப், காவி உடை இரண்டுக்கும் கல்வி நிலையங்களில் தடை- ஐகோர்ட் இடைக்கால உத்தரவு!
சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் குறித்த பயிற்சி இந்தியாவில் மின்னணு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகள் போன்றவைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது. பயிற்சி காலம் 3 முதல் 6 வாரங்கள். ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 மணி நேரம் வரை பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.