IPPB இல் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
இந்தியா அலுவலகத்தின் கீழ் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் பல்வேறு மாற்றங்களை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கொண்டுவந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மற்றொரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கினர். இதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தின் கீழ் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் அதிகளவு வாடிக்கையாளர்கள் இணைந்து வந்தனர். ஏனெனில் மற்ற வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஹிஜாப், காவி உடை இரண்டுக்கும் கல்வி நிலையங்களில் தடை- ஐகோர்ட் இடைக்கால உத்தரவு!
இந்த வங்கி கடந்த ஜனவரி 1ம் தேதி மற்றும் பிப்ரவரி 1ம் தேதி முதல் பல மாற்றங்களை கொண்டுவந்தது. அதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவு பாதிப்பு அடைந்தனர். இதையடுத்து தற்போது புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அத்துடன் மார்ச் 5ம் தேதி முதல் இந்த நடைமுறையை அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது. அதன்படி சேமிப்புக் கணக்குகளை முடிக்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது மார்ச் 5 முதல் சேமிப்பு கணக்கு முடிக்கும் வாடிக்கையாளர்களிடம் 150 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் மீண்டும் அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு – கட்டுப்பாடுகள் தீவிரம்!
இந்த வங்கியில் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பணத்தை எடுப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு முறையும் பணத்தை எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து குறைந்தபட்சமாக ரூ.25 செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படும் என்றும் 1 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை 2.25% குறைந்துள்ளது. 1 லட்ச ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை 2.50% மாற்றியுள்ளது.