ஹிஜாப், காவி உடை இரண்டுக்கும் கல்வி நிலையங்களில் தடை- ஐகோர்ட் இடைக்கால உத்தரவு!

0
ஹிஜாப், காவி உடை இரண்டுக்கும் கல்வி நிலையங்களில் தடை- ஐகோர்ட் இடைக்கால உத்தரவு!
ஹிஜாப், காவி உடை இரண்டுக்கும் கல்வி நிலையங்களில் தடை- ஐகோர்ட் இடைக்கால உத்தரவு!
ஹிஜாப், காவி உடை இரண்டுக்கும் கல்வி நிலையங்களில் தடை- ஐகோர்ட் இடைக்கால உத்தரவு!

கர்நாடகா மாநிலத்தில் பிரச்சனையாக உள்ள ஹிஜாப், காவி உடை பற்றி இடைக்கால உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப், காவி உடை அணிந்து வரக்கூடாது என்று கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஹிஜாப், காவி உடை இரண்டுக்கும் கல்வி நிலையங்களில் தடை:

கர்நாடகா மாநிலத்தில் சமீப காலமாக ஒரு பிரச்சனை வைரலாகி வருகிறது. அந்த வகையில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கும் இந்து மாணவர்கள் காவி நிற துண்டு அணிவதற்கும் இடையிலான மோதல் விவகாரம் கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. கர்நாடகாவில் பர்தா அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், பர்தாவுக்கு போட்டியாக காவி உடையணிந்து சில மாணவி, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்ததும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வருவதை கண்டித்து சில இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். கர்நாடகாவில் ஆடை தொடர்பாக கல்வி நிலையங்களில் எழுந்துள்ள இந்த பிரச்சனை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ, ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் மீண்டும் அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு – கட்டுப்பாடுகள் தீவிரம்!

இந்த வகையில் ஹிஜாப், காவி உடை என எதையும் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்று கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சீருடையை மட்டுமே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவும் கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஹிஜாப்புக்கு அனுமதி கேட்ட வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!