ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோருக்கு உதவியாக செல்ல விருப்பமுள்ள தன்னார்வ தொண்டர்கள் வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு:
தமிழகம் மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் சவுதி அரேபியா செல்லும் புனித பயணியருக்கு உதவி செய்வதற்காக, ஹஜ் தன்னார்வ தொண்டர்களாக விருப்பமுள்ள ஆண்களை, இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கம். வருடந்தோறும் இந்திய ஹஜ் குழு தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை வெளியிடும். அதேபோல் இந்தாண்டு மும்பை இந்திய ஹஜ் குழு www.hajcommittee.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த இணையதள லிங்க் மூலம் யாத்திரை செல்லும் தொண்டர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மாநிலம் முழுவதும் மீண்டும் அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு – கட்டுப்பாடுகள் தீவிரம்!
ஹஜ் பயணத்தில், தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் தகுதியுள்ள அரசு உதவி பெறும் நிறுவனங்களின் முழு நேர ஊழியர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சென்னையில் உள்ள, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ரோஸி டவர், மூன்றாம் தளம், எண்.13, மகாத்மா காந்தி சாலை, சென்னை-34 என்ற முகவரிக்கு வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
மேலும் மேற்கண்ட தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.குழு செயலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை துறை தலைவர் மூலம் உரிய வழியில் அனுப்ப வேண்டியது கட்டாயம் என்றும் அனுப்பிய விண்ணப்பத்தில் முறையான பதிவேடுகள் மற்றும் தகவல்கள் இல்லை என்றால் அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறையை தெளிவாக கற்றுக் கொண்டு விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.