Post Office ல் மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டங்கள் – முழு விவரம் இதோ!
இந்திய போஸ்ட் ஆபிஸ் மூத்த குடிமக்களுக்கான பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. தற்போது எந்தெந்த திட்டத்திற்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபிஸ் திட்டம்
இந்திய அஞ்சல் சேவை மூத்த குடிமக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதாவது, மூத்த குடிமக்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகிய சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இந்த சேமிப்பு திட்டங்கள் அனைத்திலும் அதிகமான வட்டி வழங்கப்படுகிறது. தற்போது மூத்த குடிமக்களுக்காக பல நன்மைகளை செய்து வரும் சேமிப்பு திட்டங்கள் பற்றி பார்க்கலாம். அதாவது, 5 ஆண்டு முதலீடு திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சேர்ந்து கொள்ளலாம்.
PM Kisan: ஆதார் எண்ணை இணைத்தால் ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.2000? மத்திய அரசு விளக்கம்!
அதாவது, விருப்பமுள்ள மூத்த குடிமக்கள் வங்கியின் மூலமாகவோ அல்லது இந்திய அஞ்சலகத்தின் மூலமாகவோ சேர்ந்து கொள்ளலாம். இந்த கணக்கு துவங்கும் போது கட்டாயமாக குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும். அதிகபட்ச தொகையாக 15 லட்சம் வரைக்கும் கூட முதலீடு செய்யலாம். ஒவ்வொரு காலாண்டிற்கும் மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டத்தில் 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதனையடுத்து, நிலையான வருமானம் மற்றும் வரிச்சலுகை கிடைக்க வேண்டுமென்றால் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். மேலும், இந்த திட்டத்தில் சேருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.
ஆனால், பிரிவு 80 C திட்டத்தின் கீழ் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் வரிச் சலுகை ஒரு நிதியாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும். அடுத்ததாக மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டமாக தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், பிரிவு 80 CCD (1) இன் கீழ் மூத்த குடிமக்களுக்கு வரிச் சலுகை ஒரு நிதியாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரையிலும் பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ. 50,000 வரைக்கும் கூடுதல் வரிச்சலுகை கிடைக்கும்.