கவலைய விடுங்க ரயில் பயணிகளே – இனி அனைத்தும் ரொம்ப ஈஸி!

0
கவலைய விடுங்க ரயில் பயணிகளே - இனி அனைத்தும் ரொம்ப ஈஸி!
கவலைய விடுங்க ரயில் பயணிகளே - இனி அனைத்தும் ரொம்ப ஈஸி!
கவலைய விடுங்க ரயில் பயணிகளே – இனி அனைத்தும் ரொம்ப ஈஸி!

நாட்டின் ரயில் பயணிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையில் ஒரு சூப்பர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ரயில் பயணிகள்:

நாட்டின் பெரும்பாலான மக்கள் அனைவரும் தங்கள் பொது போக்குவரத்துகளுக்கு ரயில் பயணங்களை விரும்புகின்றனர். நியாயமான கட்டணத்தில் வசதிகளுடன் தங்கள் பயண இலக்கை நோக்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் ரயில் பயணத்தின் மூலம் செல்ல முடிகிறது. மேலும் பெரும்பாலான சேவைகளும் தற்போது டிஜிட்டல் முறையில் கிடைப்பதால் ரயில் பயணிகளுக்கு அலைய வேண்டிய தேவைகள் எதுவும் ஏற்படாமல் தங்கள் இருந்த இடத்திலிருந்து செய்ய முடிகிறது. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஆப்களை மக்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் ரயில்வே வாரியம் பொதுமக்களின் இந்த பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அனைத்து விதமான ரயில்வே சேவைகளுக்கும் ஒரே செயலியின் மூலமாக எளிதாக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விற்பனை பேக்கேஜிங் முறையில் அதிரடி மாற்றம் – மத்திய அரசு உத்தரவு!

மத்திய அரசு தயாரித்து வரும் இந்த சூப்பர் ஆப் மூலமாக பயணம் முன்பதிவு, டிக்கெட் நிலவரம், ரயிலின் நேரலை இருப்பிடம், உணவு ஆர்டர் போன்ற அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ள முடியும். ரூபாய் 90 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த செயலியை சி ஆர் ஐ எஸ் ரயில்வேயின் ஐடி சிஸ்டம் யூனிட் தயாரித்து வருகிறது. மிகவும் விரைவில் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் செயலி பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!