விற்பனை பேக்கேஜிங் முறையில் அதிரடி மாற்றம் – மத்திய அரசு உத்தரவு!

0
விற்பனை பேக்கேஜிங் முறையில் அதிரடி மாற்றம் - மத்திய அரசு உத்தரவு!
விற்பனை பேக்கேஜிங் முறையில் அதிரடி மாற்றம் - மத்திய அரசு உத்தரவு!
விற்பனை பேக்கேஜிங் முறையில் அதிரடி மாற்றம் – மத்திய அரசு உத்தரவு!

மத்திய அரசு விற்பனை பொருள்களுக்கான பேக்கேஜிங் முறையில் புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவு:

பாக்கெட் செய்யப்பட்டு உணவுப் பொருள்கள் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் ஆன விற்பனை விலைகள் பதிவு செய்வது தொடர்பான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதற்கான செயல்பாடுகள் அனைத்தும் தள்ளி சென்று வருகிறது. இந்நிலையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் நாட்டில் புதிதான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அதாவது ஒரு கிலோவிற்கு மேல் பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விற்கப்படும் சில்லறை விலையுடன் ஒரு கிலோவிற்கு யூனிட் விற்பனை விலை என்று குறிப்பிட வேண்டும். ஐந்து கிலோ பாக்கெட் கொண்ட பொருள்களுக்கு ஒரு கிலோ விற்பனை விலை என்றும், ஒரு கிலோவிற்கும் குறைவான பொருள்களுக்கு ஒரு கிராம் அல்லது ஒரு லிட்டர் அல்லது ஒரு சென்டிமீட்டர் போன்றவற்றின் குறிப்பிட்ட விலையையும் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது எப்படி? விதிமுறைகள் இதோ!

மேலும் பேனா, பென்சில் போன்ற எண்ணிக்கை கொண்ட விற்பனை பொருள்களுக்கு ஒன்றின் விலையை அட்டைகளின் மீது நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும். மத்திய அரசின் இந்த உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய விதிமுறைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான அளவுகளில் மற்றும் எண்ணிக்கையில் பொருள்களை தேர்வு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!