தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பொங்கல் பரிசு 2022 திட்டம்!
தமிழகத்தில் மக்களுக்கு வழங்க உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், அரசின் உத்தரவு வெளியானதும் முறையாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
தமிழகத்தில் வரும் பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு வழங்குவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் மொத்தம் 21 வகையான மளிகை பொருட்கள் மற்றும் ஒரு முழு கரும்பும் அளிக்கப்பட உள்ளது. தற்போதைய நோய் பரவல் காலத்தில் மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் முறையான வழிகாட்டுதல்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களை நேற்று அரசு வெளியிட்டது. மேலும், வரும் ஜனவரி 3ம் தேதி முதல் இவை வழங்கப்பட உள்ளது.
உண்மை சம்பவத்தை கையில் எடுத்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – எதிர்ப்பும், ஆதரவும்!
இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் அவரே தொடங்கி வைக்க உள்ளார். பொங்கல் பரிசு திட்டத்திற்காக தமிழக அரசு 1,088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் இது தொடர்பாக ராஜாராமன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், மக்கள் கூட்டம் அதிகம் சேராத வகையில், முன்னதாகவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும்.
ஜனவரி 7 வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
மக்களுக்கு முறையாக இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களை சேர்ந்தது தான். மேலும், தொகுப்பு வழங்குவதற்காக ஜனவரி 7ம் தேதியான வெள்ளிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்றும், இதற்கு பதிலாக ஜனவரி 15ம் தேதி விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு வந்ததும் பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படும். மக்கள் பொங்கல் தொகுப்பை பெற்றதும் அவர்களின் மொபைல் எண்ணுக்கு அவர்கள் பொருட்கள் பெற்றதற்கான மெசேஜ் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.