உண்மை சம்பவத்தை கையில் எடுத்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – எதிர்ப்பும், ஆதரவும்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது பள்ளி மாணவிகள் சந்திக்க கூடிய பாலியல் தொடர்பான பிரச்சனைகள் முக்கிய கதைக்களமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கதைக்கு பார்வையாளர்களிடம் இருந்து வரவேற்புகளும், விமர்சனங்களும் கிடைத்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
இன்றைய கால கட்டத்தில் ஒளிபரப்பப்படும் சினிமா அல்லது சீரியல் கதைகள் அனைத்தும் மக்களின் எண்ணங்களோடும், உணர்வுகளோடும் ஒத்துப்போவதாக அமைந்திருக்கிறது. அதாவது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த கதைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கதைகள் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தாலும் அவ்வப்போது இவை சர்ச்சைக்கு உரியதாக மாறி விடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது பள்ளி மாணவிகள் சந்திக்கக்கூடிய பாலியல் பிரச்சனைகளை முக்கிய கதைக்களமாக எடுத்திருக்கிறது.
ஜனவரி 7 வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
சமீப காலமாக பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடைபெறு வர, மாணவிகளுக்கு தைரியம் ஊட்டும் விதமாக இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் புதிய கதைக்களம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த கதையில் இதுவரை பள்ளி ஆசிரியரால் இனியாவின் தோழி நிகிலா என்பவர் பாதிக்கப்பட்டு வர, அதனை சமாளிக்க முடியாமல் அந்த பெண் தூக்கிட்டு கொள்கிறார். ஆனால், அந்த பெண் தற்கொலை செய்தது தேர்வு பயத்தினால் என பள்ளி நிர்வாகம் கூற, அதனை கேட்கும் பாக்கியா பள்ளி நிர்வாகம் பொய் சொல்கிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் தாமரை? ரசிகர்கள் கொந்தளிப்பு!
ஆசிரியர் தான் அந்த மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என தைரியமாக சொல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கிடையில், இந்த சீரியல் பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் மாணவிகள் அவற்றை தங்களது பெற்றோரிடம் தைரியமாக பேச வேண்டும் என்றும், இப்படிப்பட்ட தவறான முடிவுகளை எடுக்க கூடாது, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கியமான கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்கிறது.
இந்த கதைக்களம் மக்களிடையே நல்ல வரவேற்புகளை பெற்று வர, இது இப்போதைய சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்கள் என்றும், நல்ல முயற்சி என்றும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. என்றாலும் பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக போராடி இதில் இருந்து மீண்டு வந்திருக்க வேண்டும். அந்த ஆசிரியருக்கு அந்த பெண்ணே தண்டனை வாங்கி கொடுத்திருக்க வேண்டும். அவள் தற்கொலை செய்திருக்க கூடாது என்றும் சில கருத்துக்கள் எழுந்திருக்கிறது. என்றாலும் இந்த கதைக்களம் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.