தமிழக விவசாயிகளுக்கு கூடிய விரைவில் நிவாரணம் – பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!!

0

தமிழக விவசாயிகளுக்கு கூடிய விரைவில் நிவாரணம் – பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு கூடிய விரைவில் நிவாரணம் வழங்க இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்:

தமிழகத்தில் நேற்று தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் தமிழகத்தில் 10000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுகைகள் வழங்குவதற்காக ரூ. 6 கோடி மானியம் வழங்கப்பட இருப்பதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள் மற்றும் உரப்படுகைகள் அமைப்பதற்கு ரூ. 5 கோடி மானியம் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம் – சர்பிரைஸ் அளித்த விலை நிலவரம்!

மேலும், தமிழகத்தில் உள்ள விளைநிலங்களின் மண்வளத்தை காப்பதற்காக மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்கிற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும் இதற்காக 22 இனங்களுடன் ரூ. 206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் செய்ததால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு கூடிய விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் இதற்காக ரூ. 208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!