தமிழகத்தில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் – வேளாண்துறை அமைச்சர்!
தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் இன்று விவசாயிகள் நலன் குறித்தான பல்வேறு அறிவிப்புகளையும் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்து வருகிறார்.
விவசாயிகள் நலன்:
தமிழக அரசு 2024 – 25 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பட்ஜெட் விவரங்கள் குறித்தான தகவல்களை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் உரையில், தமிழ் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளது. விவசாய நிலங்களின் சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு கூடிய விரைவில் நிவாரணம் – பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!!
குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் 4,700 குளங்கள் நேற்று துர்வாரப்பட்டுள்ளதாகவும், 2022- 23 ஆம் ஆண்டில் 155 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. அதே நேரம் 25 லட்சம் விவசாயிகளுக்கு இதுவரையிலும் ரூபாய் 4436 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்ட 1.8 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 118 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 1564 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூபாய் 5 கோடி மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.