தமிழக பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!
வயது வந்தோருக்கான கல்வி கற்கும் முறையில் கூடிய விரைவிலேயே டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்படும் எனவும், அதற்கான செயற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம்:
தமிழகத்தில் கடந்த 1901-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 100 பேரில் 5 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். இதன் பின்னர் 2011 ஆம் ஆண்டில் 74 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டுமே தற்போது 80.33% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதனிடையே அனைவருமே கல்வி கற்க வேண்டும் என்கிற நோக்கில் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் 15 வயதிற்கு மேல் பள்ளிக்கு செல்ல முடியாத நபர்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
கடந்த ஆண்டில் மட்டுமே வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 3.19 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதே போல இந்தாண்டும் 4.80 லட்சம் பேருக்கு பயிற்சியளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே கிட்டத்தட்ட ரூ.9.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வயதுவந்தோருக்கான கல்வி கற்கும் முறையில் டிஜிட்டல் முறையை புகுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ராமநாதபுரம், மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டுமே ரூ.6.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை? முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 25,015 பேரும், 2-ம் கட்டமாக 45.792 பேரும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் எழுத்தறிவு பயின்றுள்ளனர். இதனையடுத்து மூன்றாம் கட்டமாக 29,941 பேருக்கு கற்பிக்க 749 மையங்களில் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வயது வந்தோருக்கான கல்விகற்கும் முறையில் விரைவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.