வங்கிகளுக்கு நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை? முக்கிய அறிவிப்பு!
தெலுங்கானாவில் தற்போது பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக, வரும் ஜூலை 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வங்கி கிளைகள் திறக்கப்பட்டிருக்குமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
வங்கி விடுமுறை:
தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் இன்று (ஜூலை 11) முதல் அடுத்த மூன்று நாட்கள் வரைக்கும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மழை காரணமாக ஹைதராபாத்தில் வங்கிகள் திறக்கப்படுமா என்று ஆன்லைன் வழியாக ஐடிபிஐ வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஜூலை 11ம் தேதி காலை நிலவரப்படி வங்கி கிளைகளை மூடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் ஜூலை 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் வங்கி கிளைகள் திறக்கப்படும். ஆனால் நிலைமை மோசமாகி, கிளைகளை மூடுமாறு தெரிவிக்கப்பட்டால் மட்டுமே வங்கிகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
மூர்த்தி இடத்தில் இருந்து கடை வேலைகளை கவனிக்கும் தனம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் வைரல் வீடியோ!
இதற்கிடையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் 48 அடியைத் தாண்டி இருப்பதால் இன்று இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முழுகு, மஞ்சேரியல், பத்ராத்ரி கொத்தகுடம், நிஜாமாபாத், நிர்மல், அடிலாபாத் மற்றும் தலைநகர் ஹைதராபாத் ஆகிய 8 மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.