மாநிலத்தில் மீண்டும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி முடிவு!
கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் தற்போது குறைந்து வந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அத்துடன் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி ரத்து – வழக்கு விசாரணை தள்ளுபடி!
அத்துடன் இரண்டு நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டால் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி வருகிற ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 6ம் தேதி அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த முழு ஊரடங்கு நாளில் மருந்தகங்கள், உணவகங்களில் பார்சல் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணியை தேர்வு செய்யும் ரசிகர்கள்!
அத்துடன் கடந்த 2 வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அடுத்த ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 13ம் தேதி அன்று கொரோனா பரவலை பொறுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் அந்த மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.