IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணியை தேர்வு செய்யும் ரசிகர்கள்!
இந்த ஆண்டுக்கான IPL தொடர் வருகிற மார்ச் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. IPL வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 13 தேதி தொடங்க உள்ள நிலையில் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரசிகர்கள் CSK வீரர்களைக் கொண்டு தங்கள் சொந்த அணியை தேர்வு செய்யுமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்:
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 வீரர்கள் ஏலப் பட்டியல் 2022 பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் இரண்டு நாள் மெகா ஏலத்தின் போது மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய பட்டியல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ரூ.2 கோடியே அதிக விலையாகும். மேலும் 48 வீரர்கள் 2 கோடியை அடிப்படை விலையாக கொண்டு அணியில் இடம்பிடிக்க தேர்வு செய்துள்ளனர். மேலும் 1.5 கோடி ரூபாய் கையிருப்பு விலையுடன் 20 வீரர்கள் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு ரத்து – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இந்த ஆண்டு முதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளன. புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படுவதால், அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் விதமாக 15 வது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெற்று முடிவடைந்தது. ஒரு அணி 3 அல்லது 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி 4 வீரர்களாகிய தோனியை 12 கோடிக்கும், மொயின் அலியை 8 கோடிக்கும், ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடி க்கும் சிஎஸ்கே தக்கவைத்துள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் வீரர்களை எடுக்க CSK க்கு 48 கோடி ரூபாய் மீதம் உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை!
MS தோனி தலைமையிலான 4 முறை IPL சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த சீசனில் களம் இறங்குவதற்கு முன்பே பெரிய சாதனைகளை படைக்க ஆரம்பித்துள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி நேற்று சிஎஸ்கே இந்தியாவின் முதல் விளையாட்டு யுனிகார்னாக மாறியுள்ளது. CSK யின் சந்தை மூலதனம் இப்போது 7,600 கோடிகளைத் தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு IPL ஏலத்தில் சென்னை அணி எந்த வீரர்களை வாங்கும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இன்று மெகா ஏலத்திற்கு முன்னதாக ரசிகர்கள் சென்னை அணி வீரர்களை கொண்டு தங்கள் சொந்த அணியை தேர்வு செய்யுமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்களும் தங்களது பிளேயிங் 11ன்சை தேர்வு செய்து ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.