ஜனவரி 23 & 30 ஆகிய தேதிகளில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

0
ஜனவரி 23 & 30 ஆகிய தேதிகளில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!
ஜனவரி 23 & 30 ஆகிய தேதிகளில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!
ஜனவரி 23 & 30 ஆகிய தேதிகளில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

மாநிலம் முழுவதும் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஜனவரி 23 மற்றும் 30 ஆகியே தேதிகளில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது கொரோனா 3ம் அலைத்தொற்று பாதிப்பானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் இந்த நோய் பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் வார இறுதி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கேரளா சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், ‘மாநிலத்தில் 3 சதவீத கொரோனா நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட KL ராகுல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்டங்களை வகைப்படுத்தி புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் கேரளாவில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதன் கீழ் மாநிலம் முழுவதும் ஜனவரி 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்துள்ள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு அத்தியாவசிய சேவைகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் பெண்கள், புற்றுநோயாளிகள் மற்றும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நபர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை பின்பற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல வணிகங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைகள் மற்றும் தீம் பூங்காக்கள் போன்ற பிற சுற்றுலாத் தலங்களில் கூட்டங்கள் கூடாமல் இருப்பதை உறுதிசெய்யவும், அப்பகுதியில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாவட்ட அளவில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், மாவட்டங்களை ஏ, பி மற்றும் சி என மூன்று குழுக்களாகப் பிரிக்கவும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போது ஏ பிரிவின் கீழ் வரும் மாவட்டங்களில் அனைத்து சமூக, கலாச்சார, மத, அரசியல் மற்றும் பொது நிகழ்வுகள் மற்றும் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம்.

மாநிலம் முழுவதும் குடியிருப்பு பள்ளிகள் & விடுதிகள் மீண்டும் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

அதே நேரத்தில் பி மற்றும் சி வகை மாவட்டங்களில் இதுபோன்ற கூட்டங்கள் அனுமதிக்கப்படாது. தொடர்ந்து சி வகை மாவட்டங்களில் 10 முதல் 12ம் வகுப்புகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளும், இளங்கலை மற்றும் முதுகலை நிலை இறுதியாண்டு வகுப்புகள் தவிர மற்றவை அனைத்தும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்படும். இதற்கிடையில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 46,387 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!