சன் டிவி ‘சுந்தரி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அணு அலுவலகத்தில் என்ட்ரி கொடுத்த கார்த்திக்!
சன் டிவி “சுந்தரி” சீரியலில் தனக்கு துரோகம் செய்த கணவனை எதிர்த்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என சுந்தரி நினைக்க அதற்கு தடையாக தற்போது யாரும் எதிர்பாராத திருப்பம் வர இருக்கிறது.
சுந்தரி சீரியல்:
சுந்தரி சீரியலில், கார்த்திக் பற்றிய உண்மைகள் சுந்தரிக்கு தெரியவர தனது இலட்சியத்தை நோக்கி அவர் வாழ தொடங்கி இருக்கிறார். கார்த்திக் சுந்தரியிடம் பேச நினைக்க ஆனால் சுந்தரி அவர் மீது கோவமாக இருக்கிறார். மேலும் கார்த்திக்கின் இரண்டாவது மனைவியின் அலுவலகத்தில் தான் சுந்தரி வேலை செய்கிறாள். ஆனால் அதில் பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது அனு கர்ப்பமாக இருப்பதால் கம்பெனியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை தனது கணவன் கார்த்திக்கிடம் ஒப்படைக்கிறாள்.
கண்ணம்மாவுக்கு பாரதி விதிக்கும் நிபந்தனை என்ன? ரசிகர்களின் கேள்வியால் நொந்து போன நடிகர் அருண்!
அவருக்கு செகரட்டரியாக சுந்தரியை நியமிக்கிறாள். அதைக்கேட்டு இருவருமே அதிர்ச்சியாகின்றனர். கார்த்திக் அலுவலகத்திற்கு வந்ததும் முதலில் சுந்தரியை தான் தேடுகிறான். சுந்தரி வாழ்க்கையை கெடுத்து யார் முகத்தை பார்க்கவே கூடாது என சுந்தரி நினைத்தாலோ தினமும் அவனை பார்க்க வேண்டும். இருந்தாலும் சுந்தரி கார்த்திக் இடையே நேரடியாக சண்டை ஆரம்பம் ஆகி விட்டது. சுந்தரி என்னை தொட்டுப்பார்க்க நினைத்தால் அவளது ஆசை கனவு எதுவும் நிறைவேறாது என்று தனது நண்பன் கிருஷ்ணாவிடம் கார்த்திக் சொல்கிறான்.
கண்ணம்மாவிற்கு பாரதியின் கண்டிஷன் லட்சுமியா? கடுப்பான ரசிகர்கள்! அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட்!
ஆனால் கிருஷ்ணா சுந்தரியை தனது தங்கையாக நினைப்பதால் அவளை நீ ஏதாவது செய்ய நினைத்தால் என்னைத் தாண்டி தான் தொட வேண்டும் என்று சொல்கிறான். அதனால் கிருஷ்ணாவிடம் கார்த்திக் சவால் விடுகிறான். கர்ப்பமாக இருக்கும் அனுவிற்கு இது பற்றி எதுவும் தெரிய கூடாது என சுந்தரி நினைக்கிறார். அதே நேரத்தில் அவள் போகும் இடத்திற்கு எல்லாம் பின் தொடர்கிறான் கார்த்திக். கார்த்திக் போன் செய்தால் கூட சுந்தரி எடுப்பதில்லை. இப்படி இருக்க சுந்தரி அலுவலகத்திற்கு வந்ததும் கார்த்திக் தனது வேலையை தொடங்கி விட்டான். அலுவலகத்தில் நுழையும் சுந்தரியிடம் அனு மேடம் கணவர் உங்களை தேடுகிறார் என்று சொல்ல என்ன நடக்கப் போகிறதோ? எப்படி எதிர்கொள்வது என்று அறைக்குள் செல்கிறாள். அனுவிற்கு இந்த உண்மை எல்லாம் தெரிந்தால் என்ன ஆகும் என இந்த சீரியலில் விறுவிறுப்பு குறையாமல் இருக்கிறது.