கண்ணம்மாவுக்கு பாரதி விதிக்கும் நிபந்தனை என்ன? ரசிகர்களின் கேள்வியால் நொந்து போன நடிகர் அருண்!

0
கண்ணம்மாவுக்கு பாரதி விதிக்கும் நிபந்தனை என்ன? ரசிகர்களின் கேள்வியால் நொந்து போன நடிகர் அருண்!
கண்ணம்மாவுக்கு பாரதி விதிக்கும் நிபந்தனை என்ன? ரசிகர்களின் கேள்வியால் நொந்து போன நடிகர் அருண்!
கண்ணம்மாவுக்கு பாரதி விதிக்கும் நிபந்தனை என்ன? ரசிகர்களின் கேள்வியால் நொந்து போன நடிகர் அருண்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வதற்கு பாரதி ஒரு நிபந்தனையை முன் வைப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. இதில் பாரதியின் நிபந்தனை என்னவென்று சமூக வலைதளங்களில் எழும் கேள்விகளுக்கு நொந்து போன நடிகர் அருண் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

பல்வேறு விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களின் நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அதாவது காதல் திருமணம் செய்து கொண்ட பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பாரதியின் ஒரேயொரு சந்தேகம் காரணமாக பிரிந்து செல்ல, இவர்கள் இருவரும் எப்போது ஒன்று சேருவார்கள் என்றும் அந்த நாள் எப்போது வரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ரசிகர்களின் இந்த நீண்ட நாள் காத்திருப்பின் பலனாக தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் நெருங்கி வந்துள்ளனர்.

கண்ணம்மாவிற்கு பாரதியின் கண்டிஷன் லட்சுமியா? கடுப்பான ரசிகர்கள்! அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட்!

அதாவது கண்ணம்மா தன் மீது காட்டும் அன்பு, காதல் எல்லாம் உண்மை தான் என்று புரிந்து கொள்ளும் பாரதி, அவரை ஏற்றுக்கொள்ள சம்மதித்திருக்கிறார். இதனால் சௌந்தர்யா குடும்பத்தினருடன் சேர்ந்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களும் எக்கச்சக்க சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால், கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு நிபந்தனையை முன் வைக்கிறார் பாரதி. அந்த நிபந்தனை என்னவென்று இன்றைய எபிசோடில் தான் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் பாரதியின் நிபந்தனை குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் சீரியல் ப்ரோமோ, தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கண்ணம்மாவுக்கு பாரதி கொடுக்கும் நிபந்தனை என்னவென்று பலரும் சமூக வலைதளங்களில் நடிகர் அருணிடம் கேள்வி எழுப்ப துவங்கி இருக்கின்றனர். ரசிகர்களின் இந்த ஓயாத கேள்வியினால் நொந்து போன நடிகர் அருண், அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

இனி ‘ராஜா ராணி’ 2 சீரியலில் சந்தியாவாக சவால்களை சந்திக்கும் செம்பருத்தி ஷபானா? ப்ரோமோ ரிலீஸ்!

அதாவது, GP முத்துவின் பிரபல வசனமான செத்த பயலுகளா, நாரப் பயலுகளா, தேவையில்லாமல் கமெண்ட் பண்ணாதீர்கள். நானா கதை எடுக்கிறேன். எனக்கென்ன தெரியும் என்று நகைச்சுவையுடன் கூடிய வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். இந்த வீடியோ நடிகர் அருணிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவர் இப்படி தான் பதிலளிப்பார் என்று ரசிகர் ஒருவர் கிரியேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த ட்ரோல் வீடியோவை நடிகர் அருண் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!