நிஜத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சுந்தரி சீரியல் நாயகி கேப்ரியல்லா – வியக்க வைக்கும் நிஜ வாழ்கை!
சன் டிவியின் சுந்தரி சீரியல் மூலமாக தற்போது தமிழக பெண்களின் மனதில் முக்கிய இடத்தை பிடித்துள்ள நடிகை கேப்ரியல்லா தனது நிஜ வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பற்றி கூறியுள்ளார்.
நடிகை கேப்ரியல்லா:
பொதுவாக சீரியல்களில் லட்சியத்துடன் இருக்கும் பெண் வீட்டை விட்டு வெளியே சென்று போராடி தனது கனவை அடைவார். இதுபோன்ற கதைகளை கொண்ட அனைத்து சீரியல்களும் வெற்றி வரிசையில் தான் உள்ளது. இதேபோல், நிஜத்திலும் நடந்துள்ளது தற்போது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுந்தரி சீரியல் நாயகி கேப்ரியல்லா தான் அது.
Follow our Instagram for more Latest Updates
பள்ளி படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த கேப்ரியல்லா, 12 வது படித்த பின் தனது லட்சிய பாதையில் செல்வதற்காக வீட்டை விட்டு ஓடி வந்து சென்னைக்கு சென்றுள்ளார். அப்பொழுது தன் கழுத்தில் இருந்த செயின்னை அடகு வைத்துதான் இவர் தன் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்.
இறுதி கட்டத்தை நோக்கி செல்லும் “பாரதி கண்ணம்மா” சீரியல் – யாரும் எதிர்பார்த்த ட்விஸ்ட்!
Exams Daily Mobile App Download
சென்னையில் கடினமாக போராடி சின்ன சின்ன வாய்ப்புகளை கேப்ரியல்லா பெற்று வந்துள்ளார். ஆனால் திருச்சியில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த கேப்ரியல்லா வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அங்கிருக்கும் நபர்கள் இவரை பற்றி தவறாக பேசியுள்ளனர். ஆனால் இவரின் அம்மாவும், அப்பாவும் தான் கேப்ரியல்லாவுக்கு ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருந்துள்ளனர். அதன்பிறகு கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி தற்போது சுந்தரியாக மக்கள் மனதில் நிற்கிறார்.