ரோஜாவை பிடிக்கும் செண்பகம், தன்னுடைய மகள் தான் என சொல்வாரா? வெளியான ப்ரோமோ!
சன் டிவி ரோஜா சீரியலில் அனைவரும் எதிர்பார்த்தது போல ரோஜாவும், செண்பகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். செண்பகம் பழைய நினைவு திரும்பி ரோஜா தான் என்னுடைய மகள் என சொல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
ரோஜா சீரியல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்கள் வரிசையில், ரோஜா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில், அனு தன்னுடைய சொந்த அத்தை மகள் தான் என தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார் ஹீரோ அர்ஜுன். அதன் பின்னர் உண்மை தெரிந்தாலும், பாட்டி அதை நம்புவதாக இல்லை. இருவரையும் பிரிக்க அனு பல திட்டங்களை செய்கிறார். ரோஜா பல தடவை DNA டெஸ்ட் எடுக்க சென்றும் அனு திட்டங்கள் மூலமாக தடை ஏற்படுகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் – தனித்து களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்! கமல்ஹாசன் அறிவிப்பு!
இந்நிலையில், ரோஜாவை பாட்டி அனாதை என சொல்ல கோவப்பட்ட ரோஜா நான் தான் செண்பகத்தின் மகள் என நிரூபிக்க கடினமான பரிகாரம் பூஜை ஒன்றை நடத்துகிறார். இந்த பூஜையில் அனுவும் கலந்து கொள்கிறார். அப்போது செண்பகத்திற்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போனதால் அனு தான் தன்னுடைய மகள் என சொல்ல சொல்லி வர வைக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் DA உயர்வு? விரைவில் அறிவிப்பு!
ரோஜா வெற்றிகரமாக இந்த பூஜையை முடித்துவிட்டு மயங்கி விழ செல்ல அவரை செண்பகம் பிடிக்கிறார். அந்த பக்கம் செண்பகத்தை வர விடாமல் பலர் தடுக்க அர்ஜுன் அவர்களை அடித்து விடுகிறார். செண்பகம் ரோஜாவை பிடிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது போல ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. செண்பகத்திற்கு நினைவு திரும்பி ரோஜா தான் தன்னுடைய மகள் என சொல்வாரா என்று இந்த எபிசோடிற்கு தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.