ஊரக உள்ளாட்சி தேர்தல் – தனித்து களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்! கமல்ஹாசன் அறிவிப்பு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் 9 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் DA உயர்வு? விரைவில் அறிவிப்பு!
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு அக்டோபரில் பள்ளிகள் திறப்பு? அறிக்கை சமர்ப்பிப்பு!
வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே என பதிவிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலின் போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.