தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு அக்டோபரில் பள்ளிகள் திறப்பு? அறிக்கை சமர்ப்பிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் முக ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதி அன்று முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொடக்க நிலையில் உள்ள மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவர்கள் எழுத்துக்களை மறக்கும் நிலையில் உள்ளனர் என்று கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. அதனால் அவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Zoho நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!
மீண்டும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து கடந்த 14ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். கொரோனா தாக்கம் முழுமையாக குறையாத நிலையில் தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை தற்போதைக்கு திறக்க வேண்டாம் ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் கல்வியை தொடரட்டும் என்றனர்.
Reliance Jio வழங்கும் சிறந்த ஆஃபர்கள் இதோ – சூப்பர் டேட்டா உட்பட!
சிலர் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்று கூறினர். இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை தொகுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார். அதில், 6 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.