முடிவுக்கு வந்த சன் டிவி “ரோஜா” சீரியல்.. கண் கலங்கிய நடிகர்கள் – உருக்கமான பதிவு!
சன் டிவியில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி டாப் சீரியல் வரிசையில் இடம் பிடித்த “ரோஜா” சீரியல், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ரோஜா சீரியல் கிளைமேக்ஸ் குறித்து அதில் முக்கிய ரோலில் நடித்த கதாபாத்திரங்கள் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.
ரோஜா சீரியல்:
சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு மேல் 1000 எபிசோடுகளை கடந்து நம்பர் ஒன் சீரியல் வரிசையில் ரோஜா சீரியல் இடம் பிடித்துள்ளது. ஏகப்பட்ட திருப்பங்களுடன் இந்த சீரியல் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலின் முடிவை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில், தற்போது இந்த சீரியல் இறுதி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலில் நடிப்பது குறித்து ரோஜா கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா நல்காரி மற்றும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்த சிப்பு சூர்யன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை சிப்பு சூர்யன் தெரிவித்து இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் காத்திருக்கும் Unexpected Twist – அடுத்து வரும் அனல்பறக்கும் கதைக்களம்!
Exams Daily Mobile App Download
மேலும் தமிழ் தெரியாமல் சீரியலில் நடிக்க தொடங்கிய என்னை உங்கள் வீட்டு பெண்ணாக நினைத்தீர்கள். எல்லாருக்கும் நன்றி, இது முடிவு அல்ல இன்னொரு தொடக்கம் என பிரியங்கா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.