எதிர்நீச்சல் சீரியலில் காத்திருக்கும் Unexpected Twist – அடுத்து வரும் அனல்பறக்கும் கதைக்களம்!
சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலாக சென்று கொண்டிருக்கும் எதிர் நீச்சல் சீரியலில் வழக்கத்தை விட கதை வேறு பாதை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கதையில் இனி வரும் யாரும் எதிர்பார்க்காத வகையிலான திருப்பங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்:
அண்ணன், தம்பி 4 பேர் இருக்கும் கூட்டு குடும்ப கதையாக தொடங்கிய எதிர் நீச்சல் சீரியல் மக்களின் எதிர்பார்ப்பை சற்றும் குறைக்காமல் விறு விறுப்பான கதைக்களத்துடன் சென்று வருகிறது. மிகுந்த ஆணாதிக்க குணம் கொண்ட குணசேகரன் தனது தம்பிகளையும் தன்னை போலவே பெண்களை அடிமையாக நடத்தும் பழக்கத்தில் வளர்க்கிறார். அவர் வைத்தது மட்டும் தான் அந்த குடும்பத்தில் சட்டம், பெண்கள் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது, வீட்டு வேலைகளை செய்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பது தான் அங்கு வழக்கமாக இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
முதல் 3 மருமகள்களும் இதை போலவே இருக்க, 4-வதாக சக்தியை மணந்து கொண்டு வரும் மருமகள் ஜனனி தன்மானத்தை விட்டு இந்த குடும்பத்தில் இருக்க முடியாது என கூறி வீட்டை விட்டு வெளியேறுவார். இதன் பிறகு ஒரு பெரிய பிரளயமே நடந்து தான் ஜனனி மீண்டும் வீட்டிற்குள் வந்தார். அதற்கு காரணம் அப்பத்தா தான். இவ்வளவு நாட்களாக அமைதியாக, எதுவும் பேசாமல் இருந்த அப்பத்தா பட்டம்மாள் இப்போது தான் பேச ஆரம்பித்திருக்கிறார். இந்த இயலில் நடிகை பாம்பே ஞானம் நடித்து வருகிறார்.
சன் டிவி “இனியா” சீரியலில் ஆலியாவிற்கு ஜோடி இவர் தான் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்த சீரியலின் அடுத்து வரும் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ஜனனியின் துணிவை பார்த்து மற்ற 3 மருமகள்களும் தைரியத்துடன் கணவர்களின் ஆணாதிக்க குணத்தை எதிர்க்க தொடங்குவார்களாம். பின்னர் ஜனனியை சக்தி புரிந்து கொள்ள தொடங்கி இறங்கி வந்தாலும், ஜனனி அவரை ஒதுக்கி விட்டு, பெண்களின் சமூக நீதிக்காக குரல் கொடுப்பாராம்.
மேலும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இந்த சீரியலின் கதை நகரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தொடரின் கதை, நாட்கள் செல்லசெல்ல அதிக சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.