1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மே 9 முதல் கோடை விடுமுறை!
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 9 முதல் கோடை விடுமுறை துவங்கும் என ஆந்திரபிரேதேச பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இம்மாணவர்களுக்கு ஜூலை 4 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2021-22ம் கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகளை ஆந்திர பிரேதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி ஆந்திர பிரேதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 9 முதல் கோடை விடுமுறை துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான உத்தரவில் 2022-23ம் கல்வியாண்டு ஜூலை 4 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – மிஸ் பண்ணாம படிங்க!
இதற்கிடையில், ஆந்திர பிரேதேசத்தில் கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த ஆண்டு தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 27 முதல் மே 9 வரை நடைபெற இருக்கிறது.
ExamsDaily Mobile App Download
இதனுடன், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான தேர்வுகளை ஏப்ரல் 22 முதல் மே 4 வரை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டு ஜூலை 4ம் தேதி தொடங்க இருக்கிறது. மேலும், ஆந்திராவில் உள்ள ஜூனியர் கல்லூரிகளுக்கு மே 25 முதல் ஜூன் 20 வரை கோடை விடுமுறை அளிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.