ஜூன் 6 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
ஜூன் 6 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
ஜூன் 6 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
ஜூன் 6 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 6 முதல் கோடை விடுமுறை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கும் விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

கோடை விடுமுறைகள்

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2021-22ம் கல்வியாண்டு முடிவடைய இருப்பதால் பள்ளி மாணவர்களுக்குரிய கோடை விடுமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கோடை விடுமுறைகள் ஜூன் 6, 2022 முதல் ஜூன் 16, 2022 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவில், ‘மாநிலம் முழுவதும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்பு உயர்வு ஏப்ரல் 20ம் தேதிக்குள் செய்யப்படும்.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 7 லட்சம் பேர் பதிவு! தேர்வாணைய தலைவர் தகவல்!

அதைத் தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான புதிய சேர்க்கை மற்றும் மறு சேர்க்கை ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும். இதனுடன் இந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 6, 2022 முதல் ஜூன் 16, 2022 வரை தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒடிசாவின் இடைநிலைக் கல்வி வாரியம் அறிமுகப்படுத்திய புதிய மதிப்பீட்டுக் கொள்கையின்படி, 9ம் வகுப்பு மாணவர்கள் சுருக்க மதிப்பீடு-II தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும் SA-II மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் மே 10 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் கற்றல் இழப்புகளை ஈடுகட்ட, ஒடிசா பள்ளிக் கல்வித் திட்ட ஆணையத்தால் (OSEPA) திட்டமிடப்பட்ட கற்றல் மீட்புத் திட்டம் (LRP), காலை வகுப்புகளின் போது ஏற்கனவே உள்ள ஆசிரியர்களுடன் செயல்படுத்தப்படும் என்றும் மறு உத்தரவு வரும் வரை இந்த வகுப்புகள் தொடரும் என்றும் அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. அந்த வகையில் மே 1 முதல் ஜூன் 5, 2022 வரை கற்பிக்கும் நேரம் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை இருக்கும். இதனுடன், தகுதியான பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!