TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 7 லட்சம் பேர் பதிவு! தேர்வாணைய தலைவர் தகவல்!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - 7 லட்சம் பேர் பதிவு! தேர்வாணைய தலைவர் தகவல்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - 7 லட்சம் பேர் பதிவு! தேர்வாணைய தலைவர் தகவல்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 7 லட்சம் பேர் பதிவு! தேர்வாணைய தலைவர் தகவல்!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் நேற்று மாலை வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது என TNPSC தலைவர் தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வுக்கு வரும் 28ம் தேதி இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தகவல்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்து வருகிறது. கடந்த 2 வருடங்களில் கொரோனா எதிரொலியாக போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. மேலும் TNPSC குரூப்2, குரூப்4 தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்து விட்டது. மேலும் குரூப்4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – பரிசோதனைக்காக காத்திருக்கும் பொது மக்கள்!

குரூப் 4 பதவியில் மொத்தம் 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கான 81 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 30ம் தேதி தொடங்கியது. இதன் அடிப்படையில், குரூப் 4 தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதனால் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி விண்ணப்பித்து வருகின்றனர். இது குறித்து TNPSC தலைவர் பாலச்சந்திரன் கூறியது, குரூப் 4 தேர்வுக்கு விண்ணபிப்போர் எண்ணிக்கை தினம் தினம் அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 7 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த நிலவரப்படி, வரும் 28ம் தேதிக்குள் குரூப்4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. மேலும் கடைசி நாட்களில் அதிகமானோர் ஒரே நேரத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தால் நெட்ஒர்க் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தேர்வர்களுக்கு டென்ஷன் தான் ஏற்படக்கூடும். எனவே, தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு விண்ணப்பித்தால் நல்லது என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!