1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் கோடை விடுமுறை துவக்கம்!
கொரோனா காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் 11 நாள் கோடை விடுமுறையானது இன்று (ஜூன்.6) முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் இன்று (ஜூன் 6) முதல் கோடை விடுமுறை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு இம்முறை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் 11 நாள் மட்டும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை 45 நாட்களுக்கு அளிக்கப்படுவது உண்டு. ஆனால், இம்முறை பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை வெறும் 11 நாட்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இது குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ் கூறுகையில், ‘கோடை காலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தை தாங்கி குழந்தைகள் பள்ளிக்குச் சென்றனர். இது குழந்தைகள் படிப்பதில் இருக்கும் ஆர்வம் காட்டுவதை காட்டுகிறது. இப்போது ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், இடைநிற்றலைக் குறைக்கவும் மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
கொரோனா தொற்றுநோயின் போது, பல குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் சேர முடியவில்லை. எனவே, மாணவர்களின் படிப்பில் ஏற்பட்ட இழப்பை மீட்டெடுக்கவும், பெற்றோரின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், குழந்தைகளை பள்ளிக்கு அழைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதுவே எங்களின் நிகழ்ச்சி நிரலாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான கற்றல் மீட்புத் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தாலும் அந்த நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.