அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய உள்ளதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய முழு விவரத்தை பார்ப்போம்.
ரேஷன் கார்டு
மத்திய அரசு மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களான எண்ணெய், அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா கால கட்டத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் மற்றும் 1000 ரூ வழங்கப்பட்டது. திமுக சட்டமன்றத் தேர்தலில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் காரணமாக ஏராளமான மக்கள் அனைவரும் புதிய ரேஷன் கார்டுகளை பெற அதிகமாக விண்ணப்பித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – இன்னும் பணம் வரவில்லையா? இதை செய்தால் கிடைக்கும்!
அதுமட்டுமின்றி, ரேஷன் கார்டில் பல புதிய செயல்முறைகளை வீட்டில் இருந்தே செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், ரேஷன் கார்டில் உள்ள விதிகளில் மாற்றம் செய்ய உள்ளதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் தகுதி உடைய அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களான அரிசி மற்றும் கோதுமையின் அளவு குறைத்து வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கோதுமை கொள்முதல் சற்று குறைவாக இருப்பதால் இந்த மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்காக, புதிய அளவு பட்டியல் கிட்டத்தட்ட தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாநில அரசுகளுடன், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
மேலும், பலர் மோசடி செய்து போலியான முறையில் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர் என மத்திய அரசுக்கு தகவல் எழுந்துள்ளது. அதனால் தான் தற்போது அரசு ரேஷன் கார்டில் பல விதிகளை மாற்றம் செய்ய உள்ளதாக தெரிவிக்கபடுகிறது. மாநில அரசுகள் அளித்துள்ள பரிந்துரையின்படி, புதிய தரநிலைகள் தயாரிக்கப்பட்டு விரைவில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என அறியப்படுகிறது.