பள்ளி மாணவர்களுக்கு மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை
சமீப காலமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.
சென்னை: மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அந்த வகையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் எஸ்.சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில், ‘1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை மே 4ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை மே 6 முதல் ஜூலை 3 வரை இருக்கும்.
Exams Daily Mobile App Download
விடுமுறைகள் முடிந்து 2022-23ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் ஜூலை 4ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், SA-II தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கும், ஆன்லைனில் மதிப்பெண்களைப் பதிவேற்றுவதற்கும், பதவி உயர்வு பட்டியல்களைத் தயாரிப்பதற்கும், அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) மாணவர் சேர்க்கை பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.