அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – மாநில அரசுக்கு பரிந்துரை!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை வழங்க வேண்டும் என மாநில முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி இயக்குநர்கள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
கோடை விடுமுறை
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கோடை விடுமுறை மற்றும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கான காலக்கெடுவை கல்வி இயக்குனரகம் முன்மொழிந்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்காக மே 2ம் தேதி மூடப்பட்டு, ஜூன் 13ம் தேதியன்று புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கோடை விடுமுறை குறித்த முன்மொழிவு, முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி இயக்குநர்கள் இருவராலும் கையொப்பமிடப்பட்டு முதன்மைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி செல்ல திட்டமிட்ட பக்தர்கள் கவனத்திற்கு – விரைவில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்!
அந்த வகையில், இது குறித்த இறுதி அனுமதி மாநில கல்வித்துறையிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனிடையே மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பள்ளிகளில், புதிய கல்வியாண்டில் ஒரே சீரான தன்மையை கொண்டு வர, கோடை விடுமுறை மற்றும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கம் குறித்து அரசு தீர்மானம் அல்லது சுற்றறிக்கை வெளியிடுவது முக்கியம் என்று அந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த கடிதத்தில், ‘மே 2, 2022 முதல் கோடை விடுமுறை தொடங்கலாம். மேலும் புதிய கல்வியாண்டு ஜூன் 13, 2022ல் தொடங்கும்.
ExamsDaily Mobile App Download
கோடையில் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு விதர்பாவில் ஜூன் 27 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இது தவிர உள்ளூரில் கிறிஸ்துமஸ் அல்லது கணபதி பண்டிகைக்கான விடுமுறையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தால், மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்கள் கோடை அல்லது தீபாவளி விடுமுறையை குறைக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கல்வியாண்டில் மொத்த விடுமுறைகள் 76 நாட்களைத் தாண்டக்கூடாது என்பது முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி இயக்குநர்களின் கோரிக்கையாக இருக்கிறது.