திருப்பதி செல்ல திட்டமிட்ட பக்தர்கள் கவனத்திற்கு – விரைவில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் விரைவில் தொடங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இலவச தரிசன டிக்கெட்:
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் வருகைக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்தது. இந்த நேரத்தில் தவறாது பூஜைகளும் பிற சடங்குகளும் கோயில் வளாக ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது பக்தர்கள் வருகை இன்றி திருப்பதி கோயில் வெறிச் சோடி காணப்பட்டது. அரசு நோய்த் தடுப்பு பணியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஓரளவு பாதிப்புகள் குறைய தொடங்கியதும், நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மே மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மாதந்தோறும் திருப்பதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் தொடங்கும். இந்த நிலையில் கொரோனா குறைந்து வரும் சூழலை ஆராய்ந்து அதற்கேற்றவாறு கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக இலவச தரிசன டிக்கெட் நேரடி முறையில் விநியோகிக்கப்பட்டு வந்தது. பிப்ரவரி 16ஆம் தேதி முதல் ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.
ExamsDaily Mobile App Download
இடையில் சில காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட இலவச தரிசன டிக்கெட் விநியோகம் விரைவில் தொடங்கப்படும் என்று தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் தற்போது பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு இலவச தரிசனத்துக்காக டிக்கெட்களை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.