தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை வகுப்புகள் இயங்கும். மீண்டும் அடுத்த கல்வியாண்டு ஜூன் 13 ஆம் தேதி துவங்கும் எனவும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24 ஆம் தேதி பள்ளி துவங்கும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும், இரண்டு வருடங்களுமே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதாவது 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை கொண்டும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆம் மதிப்பெண்ணை கொண்டும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மற்றும் 11 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணை கொண்டும் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்பட்டது.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு குறித்த தகவல்!
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போல இந்தாண்டு கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. மேலும், பொதுத்தேர்விற்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியானது. அதாவது 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30 வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 9 முதல் மே 31 வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரையும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
மேலும், 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் மே 2 வரை நடைபெறவுள்ளது. இதுமட்டுமல்லாமல் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் மே 13 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது. இருப்பினும் மே 13 ஆம் தேதி வரை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு ஜூன் 13 ஆம் தேதி துவங்கவுள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24 ஆம் தேதி வகுப்புகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.