தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு குறித்த தகவல்!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொதுத்தேர்வு குறித்த தகவல்!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொதுத்தேர்வு குறித்த தகவல்!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு குறித்த தகவல்!

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாள் நெருங்கி கொண்டு வருகிறது. அதனால் பொதுத்தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பொதுத்தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுதுவதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

IPL 2022: CSK ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஏப்ரல் 25 முதல் அணிக்கு திரும்பும் தீபக் சாஹர்!

இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை அண்மையில் வெளியானது. இதையடுத்து தற்போது பொதுத்தேர்வு தொடங்க இன்னும் சற்று நாட்களே உள்ளது. அதனால் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் பொதுத்தேர்வினை முறைகேடு இன்றி நடத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2ம் திருப்புதல் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் வெளியாகியுள்ளது. அதனால் மீண்டும் இத்தேர்வினை மீண்டும் இன்று வேறொரு வினாத்தாள் மூலமாக தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு முந்தைய வினாத்தாளை விட முற்றிலும் வேறுபட்ட கேள்விகள் இடம் பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் இவர் கூறியதாவது, தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. பொதுத்தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுதுவதை தடுக்க 3500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அநேக தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!