மே 2 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் படிப்படியாக பள்ளிகள் திறக்கத் தொடங்கியது. வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த மாநில கல்வித்துறை திட்டமிட்டது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. தற்போது தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
NMDC நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை…!
தற்போது கோடை காலம் என்பதால் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. விதர்பா பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக அங்கு மட்டும் ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொதுத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை அறிவிப்பு வெளியானதை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.