மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களை கொரோனா தொற்றில் இருந்து காக்கும் நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்தது. இந்த ஆன்லைன் கல்வி பெரும்பாலான மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வந்தது. அதனால் விரைவில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வலியுறுத்தப்பட்டது.
ATM கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!
இதனையடுத்து அரசு நோய் தடுப்பு பணிகளால் தீவிரம் காட்டியதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து மீண்டும் பள்ளிகளை திறக்க ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் படி கொரோனா மூன்றாம் அலைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெறத் தொடங்கியது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு அனைத்து மாநில அரசுகளும் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.தேர்வுகள் முடிந்த பிறகு மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்த பிறகு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். விதர்பா பகுதியில் மட்டும் வெளியில் கடுமையாக இருப்பதால் அங்கு மட்டும் ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.