மது பிரியர்களுக்கான ஷாக் அறிவிப்பு – மதுபானங்களின் விலை ரூ.320 வரை திடீர் உயர்வு!
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை திடீரென ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
மது விலை அதிகரிப்பு:
தமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் மற்றும் பார்களில் விற்பனை செய்யப்படும் பீர், ஒயின் உள்ளிட்ட வெளிநாட்டு மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனம் தாறுமாறாக உயர்த்தியிருக்கிறது. அதாவது, குவாட்டருக்கு ரூபாய் 10 முதல் ரூபாய் 320 வரை விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மின்சாரத் துறையின் அதிரடி நடவடிக்கை – நிம்மதியில் பொதுமக்கள்!
அதாவது, வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டிற்கு வரும் மதுபானங்களின் இறக்குமதி சற்று பாதிப்படைந்துள்ள நிலையில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மதுபான கடைகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் டாஸ்மாக் நிறுவனம் எச்சரித்துள்ளது.