தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ஆலோசனை கூட்டம் ரத்து – திடீர் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை நீட்டிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 20) காலை நடைபெறவிருந்த நிலையில், இக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம் ரத்து
தமிழகத்தில் கடந்த மே மாதம் துவங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கூடுதல் தளர்வுகளுடன் தற்போது வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 23 வரை நடைமுறையில் இருக்கும் பொது முடக்கம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால், ஊரடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெறும் என நேற்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட்டது.
கழுத்தில் தாலியுடன் வனிதா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் விமர்சனம்!
இதனிடையே ஊரடங்கு தளர்வுகளாக தமிழகம் முழுவதும் பல்வேறு செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி கொடுத்திருந்த போதிலும் பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. அந்த வகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படும் முழு ஊரடங்கு தளர்வில் இவ்வகை செயல்பாடுகள் அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதன்படி ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து இன்று (ஆகஸ்ட் 20) காலை 11 மணியளவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1000 ரூபாய் பரிசுத்தொகை – முதல்வர் அறிவிப்பு!
இதில் முதல்வர் முக ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டம் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற இருக்கும் நிலையில் பள்ளிகள், திரையரங்குகள் ஆகியவற்றை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.