நாட்டில் விவசாய கடன்களுக்கு 1.5% மானியம் – அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாய கடன்
இந்தியாவில் கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பொருளாதார நெருக்கடி நிலை ஓரளவு சீராகியுள்ளது. இந்த நிலையில் நாட்டில் பணவீக்கம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். அந்த வகையில் இந்த ஆண்டு 2 முறை தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
PAN Card வைத்திருப்போர் கவனத்திற்கு – ஸ்மார்ட்போனில் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்று மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இத்திட்டத்திற்கு எள்ளளவு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன்படி இந்த கூட்டத்தின் முடிவில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது, நாட்டிலுள்ள பண வீக்கத்தின் காரணமாக விவசாயிகளின் கடன்களுக்கான வட்டிக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்த மானியத்தை மீனவர்கள் மற்றும் கால்நடை விவசாயிகளும் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். இந்த மானியம் அளிக்க ரூ.34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்