நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை.. தடுக்க ஒரே வழி இதுதான் – வலுக்கும் கோரிக்கை!

0
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை.. தடுக்க ஒரே வழி இதுதான் - வலுக்கும் கோரிக்கை!
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை.. தடுக்க ஒரே வழி இதுதான் - வலுக்கும் கோரிக்கை!
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை.. தடுக்க ஒரே வழி இதுதான் – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் மாணவர்களுக்கிடையே நீட் தேர்வு குறித்த பயத்தை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கல்வி மேம்பாட்டு கேந்திரம் அமைப்பினர் நீட் தேர்வு குறித்த முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

நீட் தேர்வு

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் இத்தேர்வு குறித்த பயத்தால் ஏராளமான மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்து கொள்கின்றனர். மேலும் தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார்.

இந்த நிலையில் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் தனியார் கல்லூரி ஒன்றில் கல்வி மேம்பாட்டு கேந்திர நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கல்வி மேம்பாட்டு கேந்திர மாநில பொறுப்பாளர் கூறியிருப்பதாவது, மாணவர்களுக்கு இனி வரும் காலங்களில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை ஒழுங்கமைத்து புதிதாக கல்வி முறையை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள் அனைவரும் அறியும் விதமாக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

உங்களுக்கா இந்த நிலைமை.. முன்னாள் கணவரின் திருமணத்தில் சமையல்காரியாக மாறிய பாக்கியா!

Exams Daily Mobile App Download

அத்துடன் தமிழகத்தில் நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இதனை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது மாணவர்களுக்கு 6ம் வகுப்பு முதல் நீட் தேர்வுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும். இதற்கு தகுந்தவாறு பாடத்திட்டங்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுதான் நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள ஒரே வழி என தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய கல்விக்கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த முயற்சித்து வருவதாகவும் முதற்கட்டமாக தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!