திருப்பதி செல்வோர் கவனத்திற்கு – பக்தர்களுக்காக வந்துள்ள புதிய சேவை! ஏற்பாடுகள் தீவிரம்!

0
திருப்பதி செல்வோர் கவனத்திற்கு - பக்தர்களுக்காக வந்துள்ள புதிய சேவை! ஏற்பாடுகள் தீவிரம்!
திருப்பதி செல்வோர் கவனத்திற்கு - பக்தர்களுக்காக வந்துள்ள புதிய சேவை! ஏற்பாடுகள் தீவிரம்!
திருப்பதி செல்வோர் கவனத்திற்கு – பக்தர்களுக்காக வந்துள்ள புதிய சேவை! ஏற்பாடுகள் தீவிரம்!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் 2 வருடங்களுக்கு பிறகு நடப்பு ஆண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் தீவிரமாக செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைந்தது. திருப்பதி இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் முக்கிய திருத்தலமாகும். இங்கு பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டதால் கோயில் வருமானமும் குறைந்தது. மேலும் தொற்று அச்சத்தால் முக்கிய திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு கொரோனா தொற்று குறைந்து வந்ததால் முன்பதிவு அடிப்படையில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதனால் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மீண்டும் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 17ம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த விழாவானது அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகனச் சேவை நடத்தபடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது கோயில் நிர்வாகத்தினர் பிரமோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் சென்று வர ஏதுவாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை.. தடுக்க ஒரே வழி இதுதான் – வலுக்கும் கோரிக்கை!

Exams Daily Mobile App Download

குறிப்பாக திருப்பதி – திருமலை இடையே மின்சார பேருந்துகள் சேவை தொடங்கப்பட உள்ளது. ஒலெக்ட்ரா நிறுவனத்தின் இந்த மின்சார பேருந்தில் 36 இருக்கைகளுடன் குளிர்சாதன வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேருந்தில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம். தற்போது இந்த மின்சார பேருந்து திருமலைக்கு வந்துள்ளது. இந்த பேருந்து சேவையை பிரம்மோற்சவ விழாவன்று ஆந்திர மாநில முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!