பழைய ஓய்வூதிய திட்டம் அமல், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு!
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரி விடுத்து ஜூன் 27 ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
ஊழியர்கள் போராட்டம்
இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஏதேனும் பண்டிகை தினம் என்றாலும் கூட வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட பத்து நாட்கள் வரைக்கும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து வங்கி பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல சிறப்பான பலன்கள் நிறுத்தப்பட்ட காரணத்தினால் பழையபடி பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர வேண்டும் என ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
வங்கி ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததால் வங்கி ஊழியர் சங்கத்தினர் அனைவரும் வரும் ஜூன் 27 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். இந்த வங்கி ஊழியர்களோடு சேர்ந்து அனைத்து தொழிற்சங்க ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.