தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நிறைவு – ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு மேலும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் கட்டுப்பாடுகள் தீவிரம் அடையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக ஓமிக்ரான் தொற்று வேகமெடுத்து வருகிறது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவி வரும் இதே வேளையில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்புகளும் உயர்ந்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 23,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
TNUSRB 10,000+ காலிப்பணியிடங்கள் – தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு! இளைஞர்கள் கவனத்திற்கு!
இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா அலை பரவி விட்டது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்க விரைவில் தடுப்பூசிகளை செலுத்துமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் தொடர்ந்து 2 வாரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மேலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்ற தகவல் வெளிவந்தது. இதையடுத்து நேற்றுடன் பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் அடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இந்த வாரம் மருத்துவ உயர் அதிகரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.