TNUSRB 10,000+ காலிப்பணியிடங்கள் – தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு! இளைஞர்கள் கவனத்திற்கு!

0
TNUSRB 10,000+ காலிப்பணியிடங்கள் - தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு! இளைஞர்கள் கவனத்திற்கு!
TNUSRB 10,000+ காலிப்பணியிடங்கள் - தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு! இளைஞர்கள் கவனத்திற்கு!
TNUSRB 10,000+ காலிப்பணியிடங்கள் – தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு! இளைஞர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து காவலர் பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

காவல்துறை காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பற்ற நிலையை அடைந்தனர். இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல்வேறு பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதையடுத்து தற்போது காவல்துறையில் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர் மற்றும் உடைமைக்குப் பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

மேலும் காவல்துறையினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையதளம் மூலமாக பெறப்படும் குற்றங்கள், வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையில் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளதால் காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 2021 ஜூன் 30ம் தேதி 1 லட்சத்து 33,138 காவலர்களை பணியில் அமர்த்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

SBI, HDFC, Kotak Mahindra வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள்!

ஆனால் அன்று நிலவரப்படி 1 லட்சத்து 18,881 பேர் மட்டுமே பணிபுரிந்தனர். மேலும் காவலர் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 10391 பேருக்கு அடுத்த மாதம் முதல் பயிற்சி தொடங்க இருக்கிறது. இதையடுத்து இன்னும் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனை தேர்வு வாரியம் மூலமாக தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும். அத்துடன் சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதனால் இந்த வாய்ப்பை வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!