தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்தில் கடும் ஊரடங்கு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் திருப்பூர் மற்றும் கோவையை தொடர்ந்து தற்போது ராமேஸ்வரதிலும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியதன் காரணமாக மாநில வாரியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து நோய் பரவும் விகிதத்தை குறைக்க மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள் – Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சலுகை!
இதனடிப்படையில் ஏற்காடு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ராமநாதபுரம் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் அலை பரவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,997 ஆக உள்ள நிலையில் 1,943 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி இதுவரை மொத்தம் 20,084 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே ராமேஸ்வரம் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் வரும் 12ம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.